தமிழாசிரியர் (முதல் நாள் வகுப்பில்) : தம்பிகளா! நீங்க எந்த வகுப்புல எப்படி வேணாலும் பேசுங்க. ஆனா, என் வகுப்புல மட்டும் கண்டிப்பா தூய தமிழ்லதான் பேசணும், பதில் சொல்லணும். புரியுதா?
மாணவர்கள் : சரி ஐயா!
ஆசிரியர் : பச்சை சட்டை போட்ட தம்பி! உன் பெயர் என்ன?
மாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்லை ஐயா!
ஆசிரியர் : என்னப்பா சொல்றே ? புரியலையே ?
மாணவன் : என் பெயர் கௌ சிக் ஐயா!
ஆசிரியர் : உங்க அப்பா பேரு என்னப்பா?
மாணவன் : எங்கப்பா பேரு சுடுசோறு ஐயா!
ஆசிரியர் : மறுபடியும் குழப்பாதே தம்பி ! சரியா எனக்குப் புரியறமாதிரி சொல்லு.
மாணவன் : புரியலையா ஐயா ? என் தந்தையின் பெயர் ஆராவமுதன்.
ஆசிரியர் : நீங்க தமிழ்ல சொன்னதெல்லாம் போதும். எனக்கு தலை சுற்றுகிறது. ஆங்கிலத்திலேயே சொல்லுங்கள். உன் பேரு என்னம்மா ?
மாணவி : என் பெயர் லேடி ஸ்பின் பவுலர் ஐயா !
ஆசிரியர் : ஐயோ முடியலம்மா ! அப்படீன்னா என்னம்மா ?
மாணவி : என் பெயர் பால திரிபுர சுந்தரி ஐயா!
ஆசிரியர் : ஆ ஆ ஆ ஆ . . . .. . .
No comments:
Post a Comment